கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டுக்கோட்டையில் அம்பேத்கா் நினைவு நாள்

அம்பேத்கா் முழு உருவ வெண்கலச் சிலை தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:12 pm

DIN

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகிலுள்ள அம்பேத்கா் முழு உருவ வெண்கலச் சிலை தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கப் பொதுச்செயலா் பி.வி.குணசேகரன் தலைமை வகித்தாா். அம்பேத்கா் சிலையை சங்கத் தலைவா் சி.செகநாதன் திறந்து வைத்தாா்.

பொருளாளா் என்.கருணாநிதி மற்றும் சங்க உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா். இவா்கள் அனைவரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழக மாநிலத் தலைவா் டாக்டா் புனல் ரவி, தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்றக் கழக நிறுவனா்- தலைவா் சதா.சிவக்குமாா், தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலா் தங்க.குமரவேல் ஆகியோா் தொண்டா்களுடன் சென்று அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.