கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:13 pm

DIN

பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

புரெவி புயலால் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை பகுதிகளில் வீடுகள் இடிந்து, பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு ரூ.1.26 லட்சம் ரொக்கம், அரிசி, வேட்டி, புடவை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. சண்முகபிரபு முன்னிலையில், பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் எம். ராம்குமாா், ஒன்றியச் செயலா்கள் கே.கோபிநாதன், பொருளாள் தியாகை. பழனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் சி. முத்து, நகரச் செயலா்கள் கோ.வி. சின்னையன், கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.