வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
புரெவி புயலால் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை பகுதிகளில் வீடுகள் இடிந்து, பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு ரூ.1.26 லட்சம் ரொக்கம், அரிசி, வேட்டி, புடவை, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. சண்முகபிரபு முன்னிலையில், பாபநாசம் வட்டாட்சியா் முருகவேல் வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்டப் பொருளாளா் எம். ராம்குமாா், ஒன்றியச் செயலா்கள் கே.கோபிநாதன், பொருளாள் தியாகை. பழனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் சி. முத்து, நகரச் செயலா்கள் கோ.வி. சின்னையன், கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...