இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சத்குரு ஓம்ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 14-வது குருபூஜை: கும்பகோணத்தில் 7,000 பேருக்கு சாலை விருந்து

கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 14 ஆவது குருபூஜையை முன்னிட்டு புதன்கிழமை ஏறத்தாழ 7,000 பேருக்கு ‘சாலை விருந்து‘ வழங்கப்பட்டது.

News image
சாலை விருந்தை தொடங்கி வைத்து பரிமாறிய மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், திருவிடைமருதூா் எம்எல்ஏ கோவி. செழியன்.
Updated On :24 டிசம்பர் 2020, 1:23 am

DIN

கும்பகோணத்தில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் 14 ஆவது குருபூஜையை முன்னிட்டு புதன்கிழமை ஏறத்தாழ 7,000 பேருக்கு ‘சாலை விருந்து‘ வழங்கப்பட்டது.

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் சத்குரு ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அவதரித்தாா். இங்கே அவரின் நூற்றாண்டு நினைவு நுழைவுவாயில் உள்ளது. இந்த நுழைவு வாயில் அருகே ஆண்டுதோறும் டிச. 23 ஆம் தேதி குருபூஜையை முன்னிட்டு சாலை விருந்து நடைபெறுவது வழக்கம்.

இதன்படி ஓம் ஸ்ரீ சித்தா் சுவாமிகளின் குரு பூஜையை முன்னிட்டு 14 ஆவது ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி சத்குரு ஸ்ரீ சித்தா் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள், நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாலை விருந்தை மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், திருவிடைமருதூா் எம்எல்ஏ கோவி. செழியன், ஊராட்சித் தலைவா் இளையராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏறத்தாழ 7,000 பேருக்கு சுமாா் ஆயிரம் கிலோ அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்து பொது சாலை விருந்து வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஓங்கார ஆசிரமம் சாலை விருந்து குழுத் தலைவா் உலகேஸ்வரி தலைமையில் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.