மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முழு வீச்சில் நடைபெறும் நாற்றங்கால் விற்பனை

மேட்டூர் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் விற்பனை முழுவீச்சில் நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஜூன் 2020, 6:04 am

DIN

மேட்டூர் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் விற்பனை முழுவீச்சில் நடைபெறுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டூர் அணையில் நீர்மட்டம் சுமார் 101 அடியாக இருப்பதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே, நிகழாண்டு சமுதாய நாற்றங்கால்கள் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிலத்தடி நீர் ஆதாரமும், மோட்டார் பம்ப்செட் வசதியுள்ளவர்கள் ஆற்று நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கும் சேர்த்து நாற்றங்கால் தயாரிக்கும் விதமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுளளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 40.20 ஹெக்டேரில் சமுதாய நாற்றங்கால் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில், இதுவரை 16 ஹெக்டேரில் சமுதாய நாற்றங்கால் தயாராகி வருகிறது. 

இதன் மூலம், 3,000 ஹெக்டேர் அளவுக்கு நடவு செய்யலாம். இதேபோல, கிராமப்புறங்களில் நாற்றங்கால்கள் விற்பனையும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுகுறித்து தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் பாய் நாற்றங்கால் தயாரித்து வரும் விவசாயி பி. குமார் தெரிவித்தது:
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாய் நாற்றங்கால் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை பருவத்தில் பாய் நாற்றங்கால் விற்பனை அதிகமாக இருக்காது. இந்த ஆண்டு பாய் நாற்றங்கால் விற்பனை முழு வீச்சில் உள்ளது. 

ஏறத்தாழ 1,200 ஏக்கரில் நடவு செய்வதற்குரிய பாய் நாற்றங்கால் தயாரிக்கிறோம். இதில், இதுவரை சுமார் 600 ஏக்கர் நடவுக்கான நாற்றங்கால்கள் கொடுத்துவிட்டோம். தயாரித்து கொடுக்க முடியாத அளவுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கே இன்னும் கொடுக்க முடியவில்லை என்றார் குமார். பாய் நாற்றங்கால் மட்டுமல்லாமல் சாதாரண நாற்றங்கால் விற்பனையும் முழுவீச்சில் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.