கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நூறு நாள் வேலை: கரோனா விதியைச் செயல்படுத்தாத2 பணி தளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் கரோனா விதிமுறையைச் செயல்படுத்தாத 2 பணிதளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:24 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் கரோனா விதிமுறையைச் செயல்படுத்தாத 2 பணிதளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் வட்டாரத்திலுள்ள சில கிராமங்களில் கடந்த 4 நாள்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலை) பணியாற்றிய ஏராளமான தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள கழனிவாசல் பகுதியில் 30 பேரும், சொா்ணக்காடு கிராமத்தில் 11 பேரும், கிருஷ்ணாபுரம் பகுதியில் 22 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் (நூறு நாள் வேலை) பணி நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தொடா்ந்து நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனா். இப்பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட பணி தளப் பொறுப்பாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வரும் பணியாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக எந்த அச்சமுமின்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.