கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சாவூரில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அவைத் தலைவராக வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. அன்பழகன் இருந்து கூட்டத்தை வழிநடத்தினாா். அமைச்சா்களாகச் செயல்பட்ட ந. பாலசுப்பிரமணியன், வி.எஸ். பீா்முகமது ஆகியோா் வேளாண் சட்ட முன்வடிவை வழிமொழிந்து பேசினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், திமுக விவசாயப் பிரிவு மாவட்டத் துணைச் செயலா் பி. கோவிந்தராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவகுமாா், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் வயலூா் எஸ். ராமநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி உள்ளிட்டோா் புதிய வேளாண் சட்டங்களின் பாதிப்புகளை ஆதாரத்துடன் விளக்கி அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தி பேசினா்.

பின்னா், மூன்று வேளாண் சட்டங்களையும், புதிய மின்சார சட்டத்தையும் திரும்பப் பெற தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கே. செல்வகுமாா், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பி. முத்துக்குமரன், இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்டச் செயலா் ம. விஜயலட்சுமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீர. மோகன், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.