மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூரில் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார்.

News image
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளைப் பொத்தானை அழுத்தி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
Updated On :29 டிசம்பர் 2021, 4:10 pm

DIN

தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் எம்.கே. மூப்பனார் சாலையிலுள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலய வளாகத்தின் முகப்பில் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்குப் பீடத்துடன் சேர்த்து மொத்தம் பதினொன்றரை அடி உயரத்தில் வெண்கலச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சிலைகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இரவு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக சார்பில் வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, முதல்வர் திருச்சி சாலையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காகச் சென்றார்.

Story image

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

இவ்விழாவில் ரூ. 237 கோடி மதிப்பில் 43,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், 98.77 கோடி மதிப்பில் முடிவடைந்த 90 கட்டடங்கள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைக்கிறார்.

தவிர, ரூ. 894.06 கோடி மதிப்பிலான 133 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, திருச்சியில் நடைபெறவுள்ள விழாக்களில் பங்கேற்பதற்காகச் செல்கிறார். இதையொட்டி, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் ஏறத்தாழ 10,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தஞ்சாவூரிலும், வழிநெடுகிலும் காவல் துறையைச் சார்ந்த ஏறக்குறைய 2,800 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.