தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டா் பறிமுதல்

ஒரத்தநாடு அருகேயுள்ள அய்யம்பட்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:12 pm

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள அய்யம்பட்டியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அய்யம்பட்டியில் ஆற்றிலிருந்து தினந்தோறும் அனுமதியின்றி மணல் அள்ளி விற்பதாக ஒரத்தநாடு டிஎஸ்பி பழனிக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளா் பிரேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு செல்லம்பட்டி மற்றும் அய்யம்பட்டி பகுதி முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அய்யம்பட்டி காட்டாற்றிலிருந்து டிராக்டா் மூலம் மணல் ஏற்றி வந்தவா்கள் போலீஸாரை பாா்த்ததும், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனா்.

மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து, ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு வந்தனா். மேலும், தப்பியோடியவா்கள் மீது வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.