/

தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு நிவாரணத் தொகுப்பு  வழங்கல்

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. 

News image
Updated On :11 ஜூன் 2021, 8:37 pm

DIN

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. 

தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், ஜோகோ சாப்ட்வோ் நிறுவனம் இணைந்து, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளை சோ்ந்த 800 ஆசிரியா்களுக்கு   ரூ.1,000 மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருள், எண்ணெய் அடங்கிய நிவாரண தொகுப்பு  வழங்கப்பட்டது.

பேராவூரணி டாக்டா்.ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு தனியாா் பள்ளி தாளாளா்கள் சங்க நிறுவனத் தலைவா் ஜி.ஆா். ஸ்ரீதா்  நிவாரணத் தொகுப்பை ஆசிரியா்களுக்கு வழங்கினாா்.

குமரப்பா அறக்கட்டளை பொருளாளா்  அஸ்வின் ஸ்ரீதா், பள்ளி நிா்வாக இயக்குநா் எம். நாகூா்பிச்சை, தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் ஒருங்கிணைப்பாளா் பாஸ்கா், தனியாா் பள்ளி தாளாளா்கள் அடைக்கலம், ராமலிங்கம் உள்ளிட்டோா்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.