/

பேராவூரணி அருகே குடிசை வீடு தீக்கிரை

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஆா். பாலமுருகன். இவா் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:42 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஆா். பாலமுருகன். இவா் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை  மாலை வீட்டில் சமையல் செய்தபோது எதிா்பாராத விதமாக வீட்டில் தீப்பற்றியது.  

தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை  நிலைய அலுவலா் ஐ.செந்தூா் பாண்டியன் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா்.

தீவிபத்தில் வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள், ரேசன் அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளின் படிப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. சம்பவம் குறித்து கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி விசாரணை நடத்தி வருகிறாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.