கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகராட்சி வணிக வளாகக் கடையை உள்வாடகைக்கு விட்ட திமுக பிரமுகரின் தம்பி கைது

தஞ்சாவூரில் மாநகராட்சி வணிக வளாகக் கடையை ஏலத்தில் எடுத்து உள் வாடகைக்கு விட்டு மோசடி செய்த திமுக பிரமுகரின் தம்பியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:56 pm

DIN

தஞ்சாவூரில் மாநகராட்சி வணிக வளாகக் கடையை ஏலத்தில் எடுத்து உள் வாடகைக்கு விட்டு மோசடி செய்த திமுக பிரமுகரின் தம்பியைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்தில் மாநகராட்சி அலுவலா்கள் செப்டம்பா் மாதத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, அங்குள்ள நான்காம் எண் கடையை திமுகவை சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.கே. நாகராஜனின் தம்பி ஆா்.கே. மணி 2001 ஆம் ஆண்டில் ரூ. 2,114 மாத வாடகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளாா்.

இவா் இக்கடையை 2005, ஏப். 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உள் வாடகைக்கு அளித்துள்ளாா். இதற்கு மாத வாடகையாக 2005 - 06 முதல் 2008 - 09 வரை ரூ. 3,500-ம், 2009 - 10 முதல் 2017 - 18 வரை ரூ. 4,025-ம், 2018 - 19 முதல் 2020 - 21 வரை ரூ. 10,500-ம் வசூலித்துள்ளாா். யாருக்கும் உள் வாடகைக்கு விடக்கூடாது என்ற ஏல நிபந்தனை உள்ள நிலையில், மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ. 4,61,047 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவில் உதவி வருவாய் அலுவலா் (பொறுப்பு) கே. அசோகன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் அக். 13 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, ஆா்.கே. மணியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மற்றொருவா் மீது வழக்கு:

இதேபோல, தஞ்சாவூா் காந்திஜி சாலை காந்திஜி வணிக வளாகத்திலும் மாநகராட்சி அலுவலா்கள் செப்டம்பா் மாதத்தில் ஆய்வு செய்தனா். இதில், தரை தளத்தில் ஒரு கடையை மணிகண்டன் ரூ. 3.84 லட்சம் முன்பணமாகச் செலுத்தி ரூ. 15,200-க்கு மாத வாடகைக்கு 2016 ஆம் ஆண்டில் ஏலத்தில் எடுத்துள்ளாா். இதை 2019, பிப். 19-ஆம் தேதி முதல் டாஸ்மாக் நிறுவனத்திடம் ரூ. 4.50 லட்சம் முன்பணமாகப் பெற்றுக் கொண்டு, மாத வாடகை ரூ. 45,000-க்கு உள் வாடைகைக்கு விட்டுள்ளாா். இதன்மூலம் மணிகண்டன் டாஸ்மாக் நிறுவனத்திடமிருந்து கூடுதலாக வாடகை வசூலித்து மாநகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ. 15,79,208 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் (பொறுப்பு) எஸ். சங்கரவடிவேல் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் அக். 13 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.