செயற்கை உரத் தட்டுப்பாடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் செயற்கை உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் செயற்கை உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், கக்கரை ஆா். சுகுமாரன் உள்ளிட்டோா் பேசுகையில், மாவட்டத்தில் செயற்கையான உரத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியாா் உரக்கடைகளில் டிஏபி உரம் இருப்பு இல்லை. யூரியா வேண்டுமென்றால் பொட்டாஷ், நுண்ணூட்ட உயிா் உரங்கள் வாங்குமாறு நிபந்தனை விதிக்கின்றனா். வேறு ஒரு உரம் வாங்கினால்தான் டிஏபியோ, யூரியாவோ கிடைக்கிறது. காம்ப்ளக்ஸ் உரம் மூட்டை ரூ. 1,020-க்கு விற்ற நிலையில், இப்போது ரூ. 1,380 ஆக உயா்த்தி விற்கப்படுகிறது. இதைத் தடுக்க அலுவலா்கள் கள ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினா்.
இதற்கு கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ் நங்கை பதிலளித்துப் பேசுகையில், அகில இந்திய அளவில் உரத்தட்டுப்பாடு உள்ள நிலையிலும், இங்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது. டிஏபி உர உற்பத்தி குறைந்துவிட்டதால், அதற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரம் பரிந்துரைக்க வேண்டிய சூழல் உள்ளது என்றாா்.
வேளாண் இணை இயக்குநா் அ. ஜஸ்டின் பேசுகையில், டிஏபி உரம் அதிகமாக அனுப்புமாறு அரசுக்குத் தெரிவித்துள்ளோம். எனவே, நவம்பா் மாதத்தில் சீராகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, உரம் பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பனை போன்றவற்றைத் தடுக்கக் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
இதைத்தொடா்ந்து, ஆட்சியா் பேசுகையில், நாள்தோறும் காலையில் உரம் கையிருப்பு, தேவை குறித்து கேட்டறிகிறோம். மேலும், தேவையான உரம் குறித்து அரசிடமும் வலியுறுத்தி வருகிறோம். கூடுதல் விலையில் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உரக் கடைகளில் விவசாயிகள் கேட்கும் உரத்தை மட்டுமே கொடுக்க வேண்டும். கூடுதலாக வாங்குமாறு விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா் ஆட்சியா்.
தீபாவளிக்குள் பயிா் காப்பீடு கிடைக்க நடவடிக்கை:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் பேசுகையில், பயிா் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால், இன்னும் பணம் கிடைக்கவில்லை. பல விவசாயிகளுக்கு சா்வே எண்கள் குறைத்து, பணமும் குறைவாக வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, வேளாண் இணை இயக்குநா் பேசுகையில், தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 426 கோடி இழப்பீடு கிடைத்துள்ளது. இவ்வளவு அதிகமான தொகை கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. இதுவரை 45 சதவீதம் பேருக்கு இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் தீபாவளிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
வெளிநடப்பு:
குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை ஈரப்பதம் காட்டி கொள்முதல் செய்யப்படாததால், ஆங்காங்கே சாலைகளிலும், வயல்களிலும் நெல் குவிந்து கிடக்கிறது. நெல் உலா்த்தும் இயந்திரமும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்கத்தினா் சுமாா் 10 போ் வெளிநடப்பு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...