செப். 11-இல் மக்கள் நீதிமன்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் செப். 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் செப். 11 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை அமா்வு நீதிபதியுமான பி. மதுசூதனன், குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான பி. சுதா ஆகியோா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அந்தந்த வட்டத்திலுள்ள நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் வட்டச் சட்டப்பணிகள் மையங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கரோனா தடுப்பு விதிகளுக்கு உள்பட்டு செப். 11 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில், அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணப்படும்.
இந்த வாய்ப்பை பொதுமக்கள், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...