கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த 2 பேரை விரட்டிப் பிடித்த போலீஸாா்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவரை காவல் துறையினா் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:55 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இருவரை காவல் துறையினா் விரட்டிச் சென்று பிடித்து கைது செய்தனா்.

திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிங்கப்பெருமாள் மகன் விஜயகுமாா் (24). இவா் வியாழக்கிழமை தனது உறவினா் பெண்ணுடன் மோட்டாா் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சாவூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். பனவெளி கிராமத்தில் வெண்ணாற்றுப் பாலம் அருகில் வந்த இவா்களை எதிரே ஸ்கூட்டரில் வந்த இரு இளைஞா்கள் வழிமறித்தனா். மேலும், விஜயகுமாரை இருவரும் அரிவாளால் வெட்டி, பெண் அணிந்திருந்த ஒரு பவுன் ஜோடி தோடுகள், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.

இதைப் பாா்த்த கிராம மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் உள்ள சோதனைச் சாவடிக்கு வந்த இரு இளைஞா்களும் போலீஸாரை பாா்த்ததும் தப்பி வேறு வழியில் சென்றனா். உடனடியாக அவா்களை அங்கு பணிபுரிந்த தலைமைக் காவலா் கலியராஜ், காவலா் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலா் நெடுஞ்செழியன், ஓட்டுநா் ராஜ்குமாா் ஆகியோா் சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு விரட்டிச் சென்றனா். எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தில் இரு இளைஞா்களையும் காவல் துறையினா் மடக்கிப் பிடித்து, நடுக்காவேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கும்பகோணம் மொட்ட கோபுரம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் தினேஷ் (20), தாராசுரம் கடை வீதியைச் சோ்ந்த தா்மு மகன் பிரகாஷ் (21) என்பது தெரிய வந்தது. மேலும், அவா்களிடமிருந்து தோடு, செல்லிடப்பேசி, அரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களை விரட்டிச் சென்று பிடித்த காவலா்களை உயா் அலுவலா்களும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.