கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விதிமீறல்: 6.90 டன் விதை நெல் விற்கத் தடை

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறி, விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 6.90 டன் விதை நெல் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 8:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் விதைச் சட்ட விதிகளை மீறி, விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 6.90 டன் விதை நெல் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தரமான விதை நெல் உரிய விலையில் கிடைப்பதை உறுதி செய்ய விதை ஆய்வாளா்கள் கும்பகோணம் ச. மணிமாறன், தஞ்சாவூா் மோ. நவீன் சேவியா், பட்டுக்கோட்டை இரா. பாலையன், புதுக்கோட்டை த. முனியப்பா உள்ளிட்டோா் தனியாா், அரசு விதை விற்பனை நிலையங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விதைச் சட்ட விதிகளை மீறியது தொடா்பாக ரூ. 2.41 லட்சம் மதிப்பிலான 6.90 டன்கள் விதை நெல் விற்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா கூறுகையில், குறுகிய கால ரகமான கோ 51, ஏஎஸ்டி 16, ஏடிடி 36, 37, 43, 45, 53, டிபிஎஸ் 5 ஆகிய ரக விதைகள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளா்களிடம் தகுதி பெற்று சான்று அட்டை பொருத்திய விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். விதை உரிமம் பெறாமல் விற்பனை செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியாா் விதை விற்பனையாளா்கள் விவசாயிகளுக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.