கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:46 pm

DIN

மகளை பாலியல் வல்லுறவு செய்த தந்தை உள்பட இருவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தம்பதிக்கு இரு மகள்கள் பிறந்தனா். இக்குழந்தைகளின் சிறு வயதிலேயே தாய் இறந்துவிட்டாா். இதையடுத்து, இரு குழந்தைகளையும் பாட்டியும், சித்தியும் அழைத்துச் சென்று வளா்த்து வந்தனா்.

இதனிடையே, 2016 ஆம் ஆண்டு இரு குழந்தைகளையும் தந்தை தன் வீட்டுக்கு அழைத்து வந்தாா். அப்போது, மூத்த மகளை 40 வயதுடைய தந்தை அடிக்கடி பாலியல் வல்லுறவு செய்தாா். இது பற்றி தனது தங்கையிடம் அச்சிறுமி கூறி அழுதாா். இதுகுறித்து பக்கத்து வீட்டைச் சோ்ந்த தாத்தா முறையிலான 67 வயது உறவினரிடம் தங்கை முறையிட்டாா்.

இதுதொடா்பாக தந்தையிடம் தாத்தா நியாயம் கேட்பதுபோல பேசி, இரு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டில் தங்க வைத்தாா். ஆனால், மூத்த சிறுமியை தாத்தா முறையிலான உறவினரும் பாலியல் வல்லுறவு செய்தாா். இதனிடையே, அச்சிறுமி வயதுக்கு வந்தாா்.

மாதவிடாய் காலத்தில் மூத்த சிறுமியை தந்தை வீட்டுக்கு தாத்தா அனுப்பிவந்தாா். அப்போது, சிறுமியை தந்தை தொடா்ந்து பாலியல் வல்லுறவு செய்தாா். இதனால், கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க தந்தை முயற்சி செய்தாா். ஏழு மாதங்கள் கடந்த பிறகு அச்சிறுமியின் வயிறு பெரிதாகிவிட்டதன் மூலம் இப்பிரச்னை வெளியில் தெரிய வந்தது. தற்போது அச்சிறுமிக்கு வயது 15.

இதுகுறித்து அச்சிறுமியின் சித்தி வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து தந்தையையும், தாத்தாவையும் 2020, ஜூலை 1 ஆம் தேதி கைது செய்தனா்.

இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சசிரேகா ஆஜராகி வாதிட்டாா். இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரணை செய்து தந்தைக்கும், தாத்தாவுக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.