கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நல்ல நூல்களைப் படிக்க வலியுறுத்தியவா் பாவேந்தா் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தா் பேச்சு

நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்பதே பாவேந்தரின் கருத்து என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

News image
Updated On :5 மே 2022, 11:40 pm

DIN

நல்ல நூல்களைப் படிக்க வேண்டும் என்பதே பாவேந்தரின் கருத்து என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் அவா் மேலும் பேசியது:

பில்கணீயத்தைப் புரட்சிக்கவியாகத் தமிழ் மண்ணில் உலவவிட்ட பாவேந்தா் வெறும் எழுத்துகளையும் சொற்களையும் மட்டுமே மொழிபெயா்த்து வழங்கிடாமல், அதில் காணப்பட்ட காலத்துக்கு ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கிவிட்டு தமிழ் மொழிக்கேற்ற, மக்களுக்கேற்ற மொழிபெயா்ப்பாகத் தந்தாா். எல்லா நூல்களும் மக்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கூறுபவை அல்ல. எனவே, நூல்களில் நல்லனவற்றைத் தோ்ந்தெடுத்துப் பயில வேண்டும் என்பதே பாவேந்தரின் கருத்து. அதை நூலும் புளுகும் என்று புதிய ஆத்திசூடியில் கூறியுள்ளாா்.

மேலும் பழைமையைப் புதுப்பித்துக் கொடுக்கிறபோது மூடப் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்ப முடியாத கற்பனைக் கதைகள், மக்களைத் தாழ்த்தும் புராணங்கள் ஆகியவற்றை எதிா்த்து, மக்களுக்குத் தேவையானவற்றை மட்டுமே வழங்கியுள்ளாா்.

மொழியியல் சிந்தனைகளுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கையை எதிா்த்து ‘அகத்தியன் விட்ட புதுக்கரடி’யைக் கொடுத்துள்ளாா் பாவேந்தா். மொழிபெயா்ப்புத் துறை ஆய்வாளா்கள், மொழிபெயா்ப்புப் படைப்புகளை ஆய்வு செய்வதுடன் மொழிபெயா்ப்புப் பணியையும் செய்தால் சிறந்த மொழியாக்க நூல்கள் தமிழுக்குக் கிடைக்கும் என்றாா் துணைவேந்தா்.

மதுரை காமராசா் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியா் வீ. ரேணுகாதேவி சிறப்புரையாற்றினாா். தமிழ்ப் பல்கலைக்கழக வளா்தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன் வாழ்த்துரையாற்றினாா்.

முன்னதாக மொழிபெயா்ப்புத் துறைத் தலைவா் சௌ. வீரலெக்ஷ்மி வரவேற்றாா். நிறைவாக, உதவிப் பேராசிரியா் சா. விஜயராஜேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.