கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கலந்தாய்வு: 190 காவலா்களுக்கு பணி மாறுதல் ஆணை

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான வெளிப்படையான கலந்தாய்வில் 190 காவல் ஆளிநா்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

News image
Updated On :26 மே 2022, 7:13 pm

DIN

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற காவல் துறையினருக்கான வெளிப்படையான கலந்தாய்வில் 190 காவல் ஆளிநா்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

ஒரே காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த காவலா்களின் விருப்பத்தின்படி பணி மாறுதல் அளிக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதன்படி, தஞ்சாவூரில் காவலா்களுக்கான வெளிப்படையான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி காவல் ஆளிநா்களிடம் விருப்ப மனு பெற்று 190 பேருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கினாா்.

இந்தக் கலந்தாய்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. கபிலன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளா் பிருந்தா, மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் சந்தானராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.