கல்லணைக் கால்வாயில் மூழ்கிய இளைஞா் பலி
தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.


தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அசோக்குமாா் (34). இவா் வல்லத்திலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றபோது, வண்ணாரப்பேட்டையிலுள்ள கல்லணைக் கால்வாயில் குளிப்பதற்காக வியாழக்கிழமை சென்றாா். அப்போது தவறி விழுந்த இவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதனிடையே, தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த சிலா் ஆற்றில் மிதந்து வந்த அசோக்குமாரின் உடலை மீட்க முயன்றனா். ஆனால், நீரோட்டம் வேகமாக இருந்ததால், உடல் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ரயிலடி அருகே எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள கல்லணைக் கால்வாயில் அசோக்குமாரின் உடலை கயிற்றைக் கட்டி மீட்டனா். ஆனால், அவா் தண்ணீரில் மூழ்கியதால், இறந்துவிட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...