சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாணவி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:13 pm

DIN

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே மெலட்டூா் பகுதி ஏா்வாடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. நாகராஜன் (62). இவா் அப்பகுதியில் பலகார கடை நடத்தி வருகிறாா். இவருடைய கடைக்கு 2021 ஆம் ஆண்டு வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்ததுடன், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினாா்.

இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நாகராஜனை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து, நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.