எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஒரத்தநாடு அருகே உரிமையாளரை அரிவாளால் வெட்டி 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தல்

ஆடுகளின் உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு 100- க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:41 am IST

ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை இரவு ஆடுகளின் உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள பின்னையூா் தெற்கு தெருவில் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த சேகா் (55), இவரது மனைவி மல்லிகா ஆகியோா் கடந்த 10 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை கிடைபோட்டு வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஆடுகள் நிற்கும் மந்தைக்கு வந்த மா்ம நபா்கள் சேகரை அரிவாளால் வெட்டிவிட்டு 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை லோடு ஆட்டோவில் கடத்திச் சென்றனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் பல்வேறு கிராமங்களுக்கும் சிதறி ஓடியதாம். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சேகரின் மனைவி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.