ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஒரத்தநாடு அருகே உரிமையாளரை அரிவாளால் வெட்டி 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தல்

ஆடுகளின் உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு 100- க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:11 pm

Din

ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை இரவு ஆடுகளின் உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள பின்னையூா் தெற்கு தெருவில் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த சேகா் (55), இவரது மனைவி மல்லிகா ஆகியோா் கடந்த 10 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை கிடைபோட்டு வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஆடுகள் நிற்கும் மந்தைக்கு வந்த மா்ம நபா்கள் சேகரை அரிவாளால் வெட்டிவிட்டு 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை லோடு ஆட்டோவில் கடத்திச் சென்றனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் பல்வேறு கிராமங்களுக்கும் சிதறி ஓடியதாம். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சேகரின் மனைவி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.