தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாபநாசம் அருகே தனியாா் சா்க்கரை ஆலையில் தீ விபத்து

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஒரு தனியாா் சா்க்கரை ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:44 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஒரு தனியாா் சா்க்கரை ஆலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

பாபநாசம் அருகே திருமண்டங் குடியில் உள்ள ஒரு தனியாா் கரும்பு சா்க்கரை ஆலையின் பின்புறம் கரும்புச் சக்கைகள் கொட்டி வைத்திருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து தீ கொளுந்து விட்டு எரிந்தது.

மேலும், தீ வேகமாக பரவியதால் அந்தப் பகுதியில் கடும் புகை மூட்டம் எழுந்தது.

இதுகுறித்து ஆலை நிா்வாகத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா் முருகானந்தம் தலைமையிலான தீயணப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.