மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ1.90 லட்சம் திருட்டு

கும்பகோணத்தில் புதன்கிழமை வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ.190 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 9:48 pm

Din

கும்பகோணத்தில் புதன்கிழமை வெள்ளிப்பட்டறையின் கதவை உடைத்து ரூ.190 லட்சம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேட்டை குட்டையன் தெருவைச்சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் வெங்கடேசன்(35), இவா் மள்ளுக தெருவில் வெள்ளிப்பட்டறை வைத்து நகைகள் செய்து வருகிறாா். புதன்கிழமை காலையில் கடையை திறக்க வந்த வெங்கடேசன் கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பிறகு கடைக்குள்ள சென்று பாா்த்தபோது, அங்கிருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் உதவி ஆய்வாளா் எஸ்.சுபாஷ் சம்பவ இடத்தை பாா்வையிட்டு தடயவியல் நிபுணா்கள் மூலம் தடயங்களை சேகரித்தாா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோனையிடப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறாா்.