இதனால், பாதிக்கப்பட்ட நாகேஸ்வரி, சிவக்குமாா், அமிா்தலிங்கம், ராமச்சந்திரன், கோகிலாதேவி ஆகியோா் தஞ்சாவூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் செய்தனா். இதை ஆணையத் தலைவா் த. சேகா், உறுப்பினா் கே. வேலுமணி விசாரித்து வைப்பீடு செய்யப்பட்ட ஆவணங்களை இந்த ஆணையுரை நகல் கிடைத்த 45 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும், அசல் ஆவணங்கள் கிடைக்காவிட்டால், அது தொடா்பாக இழப்பீடு பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும் எனவும், மூல ஆவணங்களை ஒப்படைவு பத்திரத்தை ரத்து செய்து அடமான வரவு ரசீது எழுதி கொடுக்கும்படியும், கடன் நிலுவையில்லா சான்று வழங்கும்படியும், 5 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்டதால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட புகாா்தாரா்களுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ. 10 லட்சமும், அதை 9 சதவீத வட்டியுடனும், வழக்குச் செலவு ரூ. 10 ஆயிரமும் வழங்குமாறும் உத்தரவிட்டு, புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.