மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பேருந்தில் பெண் பயணியின் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகள் திருடிய மா்ம நபரை புதன்கிழமை வழக்கு பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 10:36 pm

தஞ்சாவூரில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் நகைகள் திருடிய மா்ம நபரை புதன்கிழமை வழக்கு பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி பெரிய கடை வீதி பகுதி கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் மனைவி சாந்தி (59). இவா் அண்மையில் (செப்.2) தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்தில் பயணம் செய்தாா். அப்போது, இவரது கைப்பையில் இருந்த தங்கச் சங்கிலி, இரு மோதிரங்கள் என 7 பவுன்

நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.