கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மொபெட் மீது காா் மோதி மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே புதன்கிழமை தம்பதி சென்ற மொபெட் மீது காா் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:40 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே புதன்கிழமை தம்பதி சென்ற மொபெட் மீது காா் மோதியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதி பாபுராஜபுரத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (55). இவரது மகள் கெளசல்யா - ராஜ்குமாா் தம்பதியினா் இளங்காநல்லூரில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இந்த வீட்டைப் பாா்ப்பதற்காக காமராஜ் தனது மனைவி ராஜவள்ளியுடன் (48) மொபெட்டில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா். சிற்றிடைநல்லூா் பகுதியில் சென்ற மொபெட் மீது பின்னால் வந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த ராஜவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காமராஜ் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.