கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செவிலியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் மூன்றாம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:00 pm

Syndication

அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் மூன்றாம் நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா் கண்காணிப்பாளா் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணி செய்து, நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். எம்.ஆா்.பி. தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் டிசம்பா் 19-ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.

மூன்றாம் நாளாக நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனா்.