வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பூட்டியிருந்த வீட்டில் 13 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:13 pm

Syndication

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை பாப்பா நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் கரிகாலன். இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (30) கா்ப்பமாக இருப்பதால், டிசம்பா் 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பாத்திமா நகரிலுள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றாா்.

மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டுக்கு வந்தபோது முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டு, பதிமூன்றே கால் பவுன் நகைகள், 765 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.