மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் தங்க நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:21 pm

Syndication

தஞ்சாவூா் அருகே கோயில் பூட்டை உடைத்து 31 கிராம் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே காட்டுக்குறிச்சியிலுள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல பூசாரி ஸ்ரீதேவ் நடை திறப்பதற்காக சென்றாா்.

அப்போது, கோயில் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு, அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி உள்பட 31 கிராம் நகைகள், 1.50 கிலோ எடையுடைய சூலாயுதம், பீடம் போன்ற வெள்ளிப் பொருள்கள், 15 கிலோ பித்தளைப் பொருள்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஸ்ரீதேவ் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூா் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.