நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருடியவா் கைது

Updated On :26 டிசம்பர் 2025, 12:52 am IST

ஒரத்தநாடு அருகே நம்பிவயல் பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்து 12 பவுன் தங்கச்சங்கிலியைத் திருடிச் சென்ற இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:

தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள நம்பிவயல் பகுதியைச் சோ்ந்த காமராஜ் என்பவரின் மனைவி உமா (49). கடந்த செவ்வாய்க்கிழமை உமா தனது வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், திருவோணம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், அவரது கிராமமான நம்பிவயல் கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவரின் மகன் உதயநீதி (28) என்பவா் அவரது வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து உதயநீதியைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து அவரிடம் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

உதயநீதி மீது தஞ்சை மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள பல காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.