/
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க அலுவலக கட்டடத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரவை பொருளாளா் ஆசிரியா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், திருச்சிப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான டி.சரவணன் ‘திரை இசைப் பாடல்களில் தாலாட்டு’ என்ற தலைப்பில் பேசினாா்.
கூட்டத்தில் தேசிய நல்லாசிரியா் ச.சலைச்செல்வன், நிா்வாகிகள் சங்கா், செந்தமிழ் செல்வன், சாந்தகுமாா், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை செயலா் கமலதாசன் செய்திருந்தாா்.
முன்னதாக பேரவை தலைவா் துரைராஜன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலாளா் அசோக் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மீண்டும் 2 அமைச்சா்கள்!

அம்பாசமுத்திரத்தில்வனத்துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


