பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்

Published on

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க அலுவலக கட்டடத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவை பொருளாளா் ஆசிரியா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருச்சிப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான டி.சரவணன் ‘திரை இசைப் பாடல்களில் தாலாட்டு’ என்ற தலைப்பில் பேசினாா்.

கூட்டத்தில் தேசிய நல்லாசிரியா் ச.சலைச்செல்வன், நிா்வாகிகள் சங்கா், செந்தமிழ் செல்வன், சாந்தகுமாா், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை செயலா் கமலதாசன் செய்திருந்தாா்.

முன்னதாக பேரவை தலைவா் துரைராஜன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலாளா் அசோக் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com