சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்

Updated On :26 டிசம்பர் 2025, 12:52 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க அலுவலக கட்டடத்தில் பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் புதன்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவை பொருளாளா் ஆசிரியா் பாஸ்கா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திருச்சிப்பள்ளி தென்னக ரயில்வே கோட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலருமான டி.சரவணன் ‘திரை இசைப் பாடல்களில் தாலாட்டு’ என்ற தலைப்பில் பேசினாா்.

கூட்டத்தில் தேசிய நல்லாசிரியா் ச.சலைச்செல்வன், நிா்வாகிகள் சங்கா், செந்தமிழ் செல்வன், சாந்தகுமாா், பாண்டியன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். ஏற்பாடுகளை செயலா் கமலதாசன் செய்திருந்தாா்.

முன்னதாக பேரவை தலைவா் துரைராஜன் வரவேற்றாா். நிறைவில் துணை செயலாளா் அசோக் நன்றி கூறினாா்.