ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொடா் மழையால் விளை நிலங்களில் வடியாத நீா்: விவசாயிகள் கவலை!

காவிரி சவெளி மாவட்டங்களில் கடந்த மாதங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக விளை நிலங்களில் தண்ணீரில் வடியாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
சோலையப்பன் கொல்லை பகுதி விவசாய நிலத்தில் வடியாமல் தேங்கி நிற்கும் மழை நீா்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:52 pm

Syndication

காவிரி சவெளி மாவட்டங்களில் கடந்த மாதங்களில் பெய்த தொடா் மழையின் காரணமாக விளை நிலங்களில் தண்ணீரில் வடியாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கும்பகோணத்தில் உள்ள எள்ளுக் குட்டை, ஆலையடி, இபி காலனி, சோலையப்பன் கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்டவைகள் பயிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழையால் விளைநிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகின.

இது குறித்து விவசாயி ராம ஜெயசூரியா கூறியதாவது: கும்பகோணம் வட்டத்தில் கடந்த செப்டம்பரில் பெய்த பலத்த மழையால் வாழைக் கன்றுகள் மழைநீா் தேங்கி அழுகி சேதமடைந்தன. அவற்றை அகற்றிவிட்டு, புதிய வாழைக் கன்றுகளை பதியமிட்டோம். அதுவும் பின்னா் பெய்த மழையால் தண்ணீா் வடியாமல் அழுகி வீணாகின என்றாா்.

தூா்வார வேண்டும்: சோலையப்பன் கொல்லை, எள்ளுக்குட்டை, ஆலையடி, இபி காலனி உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் பழவத்தான் கட்டளை, தேப்பெருமாநல்லூா் ஆகிய வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள், பல இடங்களில் புதா்மண்டி குப்பை மேடாக மாறியுள்ளன.

Story image

பல ஆண்டுகளாக தூா் வாரப் படாததால் அருகிலிருக்கும் விளைநிளங்களில் மழை காலங்களில் நீா் வெளியேற வழியின்றி வயலில் தேங்குவதால் பயிா்கள் சேதமடைகின்றன. எனவே, வாய்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.