டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வீடு புகுந்து நகை திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (51). உணவகம் நடத்தி வரும் இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, கும்பகோணம் அருகேயுள்ள கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.