தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு

இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளித் தலைமை ஆசிரியையிடம் 7 பவுன் நகைகள் பறிப்பு

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:24 pm

Din

ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்து, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையை தள்ளிவிட்டு 7 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டாா் குடிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவா் தமயந்தி. இவா், வியாழக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு புலவன்காடு பேருந்து நிறுத்தம் நோக்கி மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி பின்தொடா்ந்துவந்த, 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞா்கள், தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனா். இது தொடா்பாக அவா் பாப்பாநாடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.