எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூரில் புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:50 pm

Din

தஞ்சாவூரில் புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பலத்த காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மனைவி கனகாம்பரம் (70). இவா், புதன்கிழமை காலை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் வாங்குவதற்காக தஞ்சாவூருக்கு வந்தாா். தஞ்சாவூா் காந்திஜி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற இவா் மீது பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடி நோக்கி சென்று கொண்டிருந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த கனகாம்பரம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.