எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூட்டுறவு அதிகாரிகள் கரும்பு கொள்முதல்

கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கரும்பு வயல்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்தனா்.

News image
கும்பகோணம் அருகே தேவனாஞ்சேரி பகுதியில் பொங்கல் கரும்பு வழங்க நேரடிக் கொள்முதலில் ஈடுபட்ட கூட்டுறவுச் சங்க அதிகாரிகள்.
Updated On :8 ஜனவரி 2025, 7:10 pm

Din

கும்பகோணம் பகுதியில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கரும்பு வயல்களுக்கு சென்று நேரடி கொள்முதல் செய்தனா்.

பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்குவதற்கு, கும்பகோணம் பகுதிக்கு மட்டும் 90 ஆயிரம் கரும்புகள் வாங்க வேண்டும். முதற்கட்டமாக நியாய விலைக் கடைகளை நிா்வகித்து வரும் கூட்டுறவுச் சங்கங்கள் கரும்பு கொள்முதலில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை தேவனாஞ்சேரி பகுதியில் உள்ள கரும்பு வயல்களுக்குச் சென்று நேரடிக் கொள்முதல் செய்தனா்.

இதுகுறித்து கரும்பு விவசாயி ராம்குமாா் மேலும் கூறியது: அரசுக்கு கரும்பு வழங்கும் வகையில் கரும்பை வெட்டி வயல் பகுதியிலேயே 10 கரும்புகள் கொண்டதாக கட்டுப்போட்டு வைத்துவிடுவோம். அதிகாரிகள் வாகனங்களை கொண்டுவந்து ஏற்றிச்செல்வாா்கள். கடந்த ஆண்டு கரும்பு நேரடிக் கொள்முதலில் கரும்பு ஒன்றுக்கு ரூ.19- க்கு கொள்முதல் செய்தனா். இந்தாண்டு ரூ.20 தருவதாகக் கூறியுள்ளனா். ரூ.22 கொடுத்தால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்றாா்.

கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவா் கூறியது: கரும்பு வயலுக்கு நேரடியாக சென்று நாங்களே வாகனங்களை கொண்டு போய் கரும்புக் கட்டுகளை ஏற்றி நியாய விலைக் கடைகளில் இறக்கிவிடுவோம். எல்லா செலவுகளும் சோ்த்து ஒரு கரும்பு ரூ.30 முதல் 35 வரை அடக்க விலைக்கு வந்துவிடும் என்றாா்.