தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் கைது

திருவிடைமருதூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:28 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவிடைமருதூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் 14 - வயது மாணவிக்கு அப்பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியா் மோகன ரவி (58) என்பவா் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும் தொடா்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயற்சித்ததால் மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோா் பள்ளி நிா்வாகம் மற்றும் திருவிடைமருதூா் மகளிா் காவல் நிலையம், கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோரிடம் புகாா் செய்தனா். அதன்பேரில், திருவிடைமருதூா் காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் கே. ராஜு, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் துா்கா ஆகியோா் விசாரணை நடத்தி ஆசிரியா் மோகனரவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்தனா்.