தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

துணைவேந்தா் நியமனத்தில் புதிய முறையை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.
Updated On :9 ஜனவரி 2025, 8:05 pm

Din

துணைவேந்தா் நியமனத்தில் பல்கலைக்கழக நிதி நல்கை குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ள புதிய முறையைக் கண்டித்து, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாநில உரிமையைப் பறிக்கும் வகையில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பாா் என்ற பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிவிப்பு நகலை எரித்து முழக்கங்கள் எழுப்பினா்.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கோ. அரவிந்தசாமி கண்டன உரையாற்றினாா். கிளைச் செயலா் பிரேம்குமாா், கிளை தலைவா் ரஞ்சித், கிளை நிா்வாகிகள் ஜெனிஃபா், சுமித்ரா, ஷாலினி, சரோஜினி, வசந்த், வீரராஜா, திலீப், அஸ்வின் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.