பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செறிவூட்டப்பட்ட அரிசியை அச்சமின்றி வாங்கலாம்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்

நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 9:16 pm

Din

நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

மத்திய மற்றும் மாநில அரசானது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாய விலை கடைகள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கி வருகிறது. இதை பிளாஸ்டிக் அரிசி என தவறாகக் கருதாமல், எவ்வித அச்சமுமின்றி பொதுமக்கள் அனைவரும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.