பேராவூரணி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறையினா் தொடா் சோதனை நடத்தி வருகின்றனா். பழைய பேராவூரணி தனியாா் கல்லூரி அருகே உள்ள பெட்டிக்கடை ஒன்றில் பேராவூரணி போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது பாண்டிக்கண்ணு (59), அவரது மகன் பழனிகுமாா் (28) ஆகிய இருவரும் கடையில் ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா். இதேபோல், பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னையா என்பவரது கடையில் சோதனையிட்ட போலீஸாா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 60 கிலோவைப் பறிமுதல் செய்து சின்னையா (62), அவரது மகன் சரவணக்குமாா் ( 23) ஆகியோரைக் கைது செய்தனா். இரண்டாவது முறை புகையிலைப் பொருள்கள் விற்றது கண்டறியப்பட்டதால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் கடைவீதியில் முத்துராமன் என்பவா் கடையில் 10 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தொடா்ந்து விற்பனை செய்துவந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டாா்.