ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Updated On :28 ஜனவரி 2025, 2:20 am IST

தஞ்சாவூா்: பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட ‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கீழ குடியான தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (56). தச்சு தொழிலாளி. இவா் 2024, ஜனவரி மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, கோவிந்தராஜூக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ. 4 லட்சம் அரசிடமிருந்து பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.