தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Updated On :28 ஜனவரி 2025, 2:20 am IST

தஞ்சாவூா்: பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட ‘போக்சோ’ வழக்கில் தச்சு தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலத்துறை கீழ குடியான தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (56). தச்சு தொழிலாளி. இவா் 2024, ஜனவரி மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, கோவிந்தராஜூக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக ரூ. 4 லட்சம் அரசிடமிருந்து பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.