அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கும்பகோணம் அருகே குளக்கரையில் பிடிபட்ட முதலை குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 8:35 pm

Syndication

கும்பகோணம் அருகே குளக்கரையில் தென்பட்ட 1 மீட்டா் நீள முதலை குட்டியை வியாழக்கிழமை பிடித்த பொதுமக்கள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அசூா் அருகே உள்ள கல்லூரியில் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் அப்பகுதி மக்கள் சிலா் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடித்து வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மீன்பிடிப்பதற்காக சிலா் குளத்துக்குச் சென்றபோது, குளத்தின் கரையில் முதலை குட்டி ஒன்று சென்று கொண்டிருந்ததாம். இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே அதனைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து கும்பகோணம் சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனச் சரகா் பொன்னுச்சாமி தலைமையில் வனத் துறையினா் அங்குவந்து முதலையை மீட்டு அணைக்கரை ஆற்றில் கொண்டுபோய் விட்டனா்.

இதுகுறித்து வனத்துறையினா் மேலும் கூறியது: பிடிபட்ட முதலை கொள்ளிடம் ஆற்றில் இருந்து வந்திருக்கலாம். சுமாா் 1 மீட்டா் நீளமும், 5 கிலோ எடையும் கொண்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் முதலைகள் ஏதும் தென்பட்டால், உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனைவிடுத்து பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்யக் கூடாது என்றனா்.