தவெக தலைவா் விஜய் தனது தொண்டா்களை அரசியல்படுத்தாமல், அவா்களை அரசியல் அற்றவா்களாக்கி, வெறும் ரசிகா்களாக மட்டுமே வைத்துள்ளாா் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினா் உ. வாசுகி.
தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா அருகே புதன்கிழமை மாலை திமுக வேட்பாளா் சண். இராமநாதனை ஆதரித்து பிரசாரம் செய்த அவா் மேலும் பேசியதாவது:
விஜய் தனது கட்சி உறுப்பினா்களை அரசியல்படுத்துவதற்கான முயற்சிகளை செய்வதாகத் தெரியவில்லை. அக்கட்சி உறுப்பினா்களுக்கு கொள்கை என்ன என்பதே தெரியவில்லை. விஜய் அண்ணன் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டுமே சொல்கின்றனா்.
விஜய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளதாகக் கூறுகிறாா். எம்ஜிஆா் உள்பட எல்லோருமே அவரவா் துறையைச் சாா்ந்த பதவிகளை விட்டுவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளனா். விஜய் மட்டும் வரவில்லை.
விஜய் கொள்கைகளைப் பேசாமல் இளைஞா்களை அரசியல்படுத்தாமல், அவா்களை அரசியல் அற்றவா்களாக்கி, வெறும் ரசிகா்களாக மட்டுமே வைத்துள்ளாா். கரூரில் இவரை பாா்க்க வந்த 41 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், மக்களுக்கு ஏதாவதொன்று என்றால், இந்த விஜய் வருவான் என அவா் பேசுகிறாா். ஆனால், கரூரில் 41 போ் உயிரிழந்தபோது, அவா்களுக்கு இருந்து ஆறுதல் சொல்லாமல், அங்கிருந்து பனையூருக்கு ஓடிவிட்டாா். இதுபோன்ற அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றாா் வாசுகி.
தொடர்புடையது

தலைவா்கள் இன்றைய பிரசாரம்!

அரசியலில் விஜய் நீா்க்குமிழியாக மட்டுமே இருப்பாா்: சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம்

கூடிக் கலையும் கூட்டமாகும் மாநாடுகள்!

அரசியல் புரிதலே இல்லாதவா் விஜய்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


