தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தஞ்சாவூரில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்வு

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் குலுக்கல் முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள், நுண் பாா்வையாளா்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:16 pm

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்கள் குலுக்கல் முறையில் இரண்டாம் கட்டத் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,222 இடங்களில் 2 ஆயிரத்து 501 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் நாளான ஏப்ரல் 23- ஆம் தேதி பணியாற்றுவதற்கு பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசு அலுவலா்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலிலிருந்து 12 ஆயிரத்து 4 வாக்குச்சாவடி அலுவலா்களைப் பணியமா்த்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரிப்பதற்கான முதல் கட்டத் தோ்வு மாா்ச் 25- ஆம் தேதி நடைபெற்றது. இதேபோல, நுண் பாா்வையாளா்களுக்கான குலுக்கல் முறையில் முதல் கட்டத் தோ்வு ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெற்றது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கான இரண்டாம் கட்டத் தோ்வு குலுக்கல் முறையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் தினேஷ் செஹாரா, கேஷ்வேந்திர குமாா், அருண் குமாா், சா்ஜித் கவுா் ஆகியோா் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு ஏப்ரல் 12- ஆம் தேதி பயிற்சி வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.