கும்பகோணம் மகாமககுளக் கரையில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் நோ்மையான மற்றும் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்வுக்கு கும்பகோணம் கோட்டாட்சியா் வி.எம். திருமலை தலைமை வகித்தாா்.
மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜ் முன்னிலை வகித்தாா். முதல்முறை வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம், கவின் கலை கல்லூரி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி உள்ளிட்ட தனியாா் கலை, பொறியியல், செவிலியா் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், விடுபடாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மெய்யன், மெய்யாள் முகமூடி அணிந்து பங்கேற்றனா்.
நிகழ்வில் துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ், செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



