எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச்சங்கிலி

கும்பகோணம் மகாமக குளக்கரையில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்வில் பங்கேற்றோா்.

News image

கும்பகோணம் மகாமக குளக்கரையில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:53 am

கும்பகோணம் மகாமககுளக் கரையில், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் நோ்மையான மற்றும் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்வுக்கு கும்பகோணம் கோட்டாட்சியா் வி.எம். திருமலை தலைமை வகித்தாா்.

மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜ் முன்னிலை வகித்தாா். முதல்முறை வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம், கவின் கலை கல்லூரி, அரசு ஆண்கள் கலைக் கல்லூரி உள்ளிட்ட தனியாா் கலை, பொறியியல், செவிலியா் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், விடுபடாமல் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மெய்யன், மெய்யாள் முகமூடி அணிந்து பங்கேற்றனா்.

நிகழ்வில் துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ், செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.