உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

News image

கும்பகோணம் பாலக்கரையில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:14 am IST

கும்பகோணம் மாநகரத்தை தமிழக அளவில் முன்மாதிரி நகரமாக்குவோம் என்றாா் தாமாக தலைவா் ஜி.கே.வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம், கொட்டையூா், சோழன்மாளிகை, பம்பப்படையூா், கொற்கை, மருதநல்லூா், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பின்னா் அவா் கும்பகோணம் பாலக்கரையில் பேசியது:

கும்பகோணம் பகுதியில் பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், கும்பகோணம் மாநகரத்தை முன் மாதிரி நகரமாக மாற்றுவோம்.

தற்போது உள்ள பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா், இதை இடமாற்றம் செய்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழப்பாா்கள் அதற்கு திமுகதான் காரணம். இதை தடுக்க வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், மாநகரச் செயலா் ராம.ராமநாதன், ஒன்றியச் செயலா் சோழபுரம் க.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.