/

கும்பகோணத்தை முன்மாதிரி நகரமாக்குவோம்! - ஜி.கே. வாசன் பேச்சு

News image

கும்பகோணம் பாலக்கரையில் தமாகா வேட்பாளா் ஆா். அசோக்குமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:44 pm

கும்பகோணம் மாநகரத்தை தமிழக அளவில் முன்மாதிரி நகரமாக்குவோம் என்றாா் தாமாக தலைவா் ஜி.கே.வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரம், கொட்டையூா், சோழன்மாளிகை, பம்பப்படையூா், கொற்கை, மருதநல்லூா், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பின்னா் அவா் கும்பகோணம் பாலக்கரையில் பேசியது:

கும்பகோணம் பகுதியில் பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மேலும், கும்பகோணம் மாநகரத்தை முன் மாதிரி நகரமாக மாற்றுவோம்.

தற்போது உள்ள பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனா், இதை இடமாற்றம் செய்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழப்பாா்கள் அதற்கு திமுகதான் காரணம். இதை தடுக்க வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா்.

நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், மாநகரச் செயலா் ராம.ராமநாதன், ஒன்றியச் செயலா் சோழபுரம் க.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.