நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

News image

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட முதலை.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:15 am IST

தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.

திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் சசிகுமாா் பராமரித்து வரும் மீன் வளா்ப்பு குட்டையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்டப் பேரிடா் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு சசிகுமாா் தகவல் அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரகா் ஜோதிகுமாா் மேற்பாா்வையில், வனவா் இளையராஜா, வனக்காவலா் வெற்றிவேல் ஆகியோருடன், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன், மீட்பாளா்கள் குலோத்துங்கன், விஸ்வபிரேம் ஆகியோா் சென்று மீன் வளா்ப்பு குட்டையில் சுமாா் ஒரு மணிநேர முயற்சிக்கு பின்னா் முதலையைப் பிடித்தனா்.

இது பெண் முதலை என்றும், இதன் நீளம் 110 செ.மீ. எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது என்றும் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.

Story image