நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா நிறைவு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.

Updated On :1 மே 2026, 2:14 am IST

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், 15- ஆம் திருநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

நிறைவு நாளான வியாழக்கிழமை காலை கோயிலிருந்து அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றாா். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனுடன் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த சித்திரைப் பெருவிழா நிறைவடைந்தது.

 தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.