தஞ்சாவூா் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா தீா்த்தவாரியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில், 15- ஆம் திருநாளான ஏப்ரல் 27-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
நிறைவு நாளான வியாழக்கிழமை காலை கோயிலிருந்து அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பட்டு, அருகில் உள்ள சிவகங்கை குளத்துக்கு சென்றாா். அங்கு அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதனுடன் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த சித்திரைப் பெருவிழா நிறைவடைந்தது.

தஞ்சாவூா் பெரிய கோயில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரியில் அஸ்திரதேவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
பெரிய கோயிலில் கதண்டு கடித்து 4 போ் காயம்

தஞ்சை பெரியகோயிலில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்.பி. தொடங்கிவைத்தாா்

எஸ்.குச்சிப்பாளையம் வீரராகவப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



