பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

போக்சோ சிறைக் கைதி உயிரிழப்பு: சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் புகாா்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ கைதி பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போக்சோ கைதி பலத்த காயங்களுடன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் எழுப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சோ்ந்தவா் மணி (69). கட்டட தொழிலாளி. இவா் 2018 ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இவா் திண்டுக்கல் கிளைச் சிறையிலும், பின்னா் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட இவா் பலத்த காயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் ஆக. 21-ஆம் தேதியும், அறுவை சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22-ஆம் தேதியும் சோ்க்கப்பட்டாா். இந்நிலையில், மணி ஆக. 24-ஆம் தேதி உயிரிழந்தாா்.

மணியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா், உறவினா்கள் புதன்கிழமை புகாா் எழுப்பி, அவரது உடலை வாங்க மறுத்தனா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனிடையே, தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் நடுவா் பி. பிரபு ராம் தலைமையில் அலுவலா்கள் குடும்பத்தினா் மற்றும் காவல் துறையினரிடம் சம்பவம் குறித்து புதன்கிழமை எழுதி வாங்கினா்.

உடற்கூறாய்வு முடிந்த பின்னா், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, மணியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.